செவ்வாய், 29 டிசம்பர், 2009

பணம் - கவலை



பணம் (பணமற்ற மனிதன்)

வாடிய பூவை வண்டுகள் தேடலாம்
வற்றிய குளமதை வாத்துகள் தேடலாம்
பெய்யாத மேகங்கண்டு பொன்மயில் ஆடலாம் - பணம்
இல்லாத உனையிந்தப் பாரிலுள்ளோர் தேடுவரோ?


கவலை (சுற்றமிழந்த மனிதன்)

மண்ணுலகம் செழிக்க விண்ணுலகம் அழுகிறது
பிள்ளை நலம்வாழ பெற்றவள் அழுகிறாள்
கணவன் உயிர்காக்க தாலிகட்டியவள் அழுகிறாள் - மனிதா
எவ்வுயிர் காக்கநாளும் நீயிங்கு அழுகிறாய்?.


இந்த படத்திற்கேற்றார் போல் எழுத முயன்றது.

புதன், 23 டிசம்பர், 2009

மழையும் மண்ணும் மனிதனும்



விந்தாய் விழுந்து நண்டுபோல் ஊர்ந்து
கருவோடு கலந்து உருவொன்ரு கொண்டு
காற்றையும் கடன்பெற்று வாங்கி ஊனுடன்
உயிரும் பெற்றது வளர்ந்திடல் ஆனதே ----(1)

அப்பனின் வயிற்றில் ஓரிரு மாதமும்
அம்மையின் வயிற்றில் ஈரைந்து மாதமும்
முடங்கி யிருந்து முடிவில் முந்திக்கொண்டு
வெளிவந்து முழு முண்டமாய் விழுந்ததுவே ----(2)

மலர்ந்த உடன் மணம் வீசும் மலராய்
பிள்ளை மண்ணில் விழுந்தவுடனே வீறிட்டழ
கல் விழுந்தவுடன் கலங்கிப்போகும் குளமாய் - குழந்தை
பெற்றவள் உடலிங்கு நிலை குலைந்திட்டதே ----(3)

அலறல் ஒளி கேட்டே ஆடவர் அகமகிழ
பிள்ளைஒளி கேட்டே பெண்டீர் பெயர்தேட
சுற்றியிருந்த சுற்றம் இனிப்பைச் சுவைத்திருக்க - பூமி
குளிர்ந்திட பொத்தென்றே மழைவந்து விழுந்ததுவே ----(4)

உயிறற்ற சடலமா யுடைந்து கிடந்தவள்
தத்தி யெழும்புகிறாள் தண்டுடைந்த கொடிபோல
இழந்த சக்தியையெல்லாம் மீண்டும் இறுகப்பிடித்திழுத்தே
பெற்றவள் மயங்குகிறாள் பிள்ளையின ழகுகண்டே ----(5)

பிள்ளையை யேந்துகிறார் பெண்டீர் பெற்றவரிடத்தினிலே
முல்லைப் பூவைபோல பிள்ளையைக் கையிலேந்தி
தில்லை யரசனை யெண்ணி பெற்றவர்
கொள்ளை யழகுகொண்ட குழந்தைமுக நோக்கினாரே ----(6)

பேய்மழை பெய்துபெரு வெள்ளம் உருண்டுவர
மண்ணையும் மடுவையும் மழைநீர் மறைக்க
இடியின் கோரயிசைகேட்டு கூடியிருந்த வரெல்லம்
விழிபிதுங்கி கலங்கலானார் வீசுகின்ற காற்றையுங் கண்டே---(7)

ஆடும் அண்டி வாழும் நாயும்
ஓடும் எலியும் கொக்கரிக்கும் கோழியும்
பாடும் பச்சை கிளியும் பசியில்
வாடும் பூனையும் ஓடி ஒளிந்ததுவே ----(8)

வெளிச்சம் விலகிவிட்டது வெண்ணிலவோவர மறந்துவிட்டது
தெளிவற்ற மேகங்கண்டு பலர்தேம்பி நிற்கின்றார்
உருண்டுவந்த வெள்ளமது கதவை உந்தித்தள்ள
திரண்டுநின்ற மரமெல்லாம் திடீரென்று விழுந்ததுவே ----(9)

தொட்டிலி லிட்டார் பிள்ளையை கயிற்றுக்
கட்டிலி லிட்டார் கண்மலரா மங்கையை
அகல் விளக்கேற்றி பகல்போலாக்கி விட்டார்
வருகிற வினையறியாது வழக்கம்போலே பேசலானாரே --(10)

அடங்கிவிடும் மழையென்று அனைவரும் நினைத்திருக்க
ஒற்றைக் கண்கொண்டே காற்றுஓங்கி வீசிற்றேயது
வீட்டைப் பெயர்க்கப்பார்த்து விட்டத்தைப் பிரித்தேடுத்து
தொங்கிக் கொண்டிருந்த தொட்டிலையும் தூக்கிச்சென்றதுவே ---(11)

போர்க்களத்தில் எதிரியின் மேல்பாயும் அம்பாய்
சுற்றியிருந்த சுவரிடிந்து சுற்றத்தார் மேலேவிழ
வெள்ளம் புகுந்து வீட்டையும் நிரப்பிவிட
மின்னல் வந்திறங்கி மிரச்சியும் பண்ணிட்டதே ----(12)

ஓங்கி உயர்ந்திருந்த வீடுஉருக் குலைந்திருக்க - தண்ணீர்
தேங்கி நிற்கிறது தெரியும் திசையெங்கும்
கலகலவென இருந்த வீட்டில்கடுகளவு ஓசையில்லை - காற்று
கவர்ந்துபோன பிள்ளையைக் கண்டுபிடிக்கவும் ஆளில்லை ---(13)

வெள்ளி, 18 டிசம்பர், 2009

கணபதி


கைகூடாக் காரியமெல்லாம் கணப் பொழுதில் கைகூடும்
மெய்வாடி வருந்துவோர் மேனி யெழுந்துநடை போடும்
கொடும் பசிக்குணவும் நல்ல குலமகளும் தேடாச்செல்வமும் - xzfsdfsdfsdsadfsafsdfsdgassdfertghyjdgfdgdfgdfgdfadadadf தேடிவந்து
சேர்ந்திடும் கணபதியை யொருகணம் கருத்திடை வைப்போர்க்கு.

செவ்வாய், 8 டிசம்பர், 2009

காதல் - தேடல்

ஓடுற பொண்ணே நில்லு - உன்
உறவுக்காரன் யாருன்னு சொல்லு


வழிமறிக்கிறவரே கொஞ்சம் தள்ளு - மீரி
வந்து நின்னா தெரிக்கும் பல்லு
(ஓடுற)

நீ, வாடி ஓடுரியே பாரு - இங்க
வந்து உட்கார்ந்து காரணத்தை கூறு

அந்தி மயங்கி விழுகிற நேரம் - என்னைக்
காணாமல் தேடும் என்வீடும் (ஓடுற)

பைத்தியமா நானும் இருக்க - உன்மேல்
பைத்தியமா நானும் இருக்க - நீயும்
வைத்தியம் பார்க்க வாராயோ கிழக்க

ஏ, பைத்தியமே கொஞ்சம் ஒதுங்கு - அரை
பைத்தியமே கொஞ்சம் ஒதுங்கு - அடி
விழுகிறதுக்கு முன்னே உன்வீட்ட நெருங்கு (ஓடுற)

தேடி வந்தேனே உன்னை - நாளும்
தேய்ந்து போறேனே கண்ணே

புரியுதடா உன் தாகம் - இது
ஆடி அடங்காத மோகம் (ஓடுற)

புரிந்தவளே இங்கே வா வா - கண்ணால்
என்னை கவர்ந்தவளே வா வா

போதுமடா இந்தப் பேச்சு - உன்னால்
வெகுநேரம் வீணாகிப் போச்சு

ஓடுற பொண்ணே நில்லு - உன்
உறவுக்காரன் யாருன்னு சொல்லு


வழிமறிக்கிறவரே கொஞ்சம் தள்ளு - மீரி
வந்து நின்னா தெரிக்கும் பல்லு

விவசாயி


உலகம் உயருது - பல
உண்மைகள் புரியுது - ஏழை
நாடி நரம்பெல்லாம் - இன்னும்
வாடி வதங்குது

இவன்
நெல் விளைய மண் மிதிச்சான்
நேரம் பார்த்து தண்ணீர் விட்டான்
கால நேரமில்லாம காவல் காத்தான்
நெல் விளைந்து நெடு நெடுன்னு நிக்கையில - கடன்
கொடுத்தவன் நெல்ல கவர்ந்து கொண்டு போயிட்டான்

உலகம் உயருது - பல
உண்மைகள் புரியுது - ஏழை
நாடி நரம்பெல்லாம் - இன்னும்
வாடி வதங்குது

அரசாங்க சலுகைகள் அத்தனையும்
அரசியல்வாதிகள் வடிகட்டி புடிக்க
அதுல மிஞ்சிய ரெண்டு வடிஞ்சு - சாகுர
அடித்தட்டு மக்கள் வாயில விழுகுது வாய்க்கரிசி போல

உலகம் உயருது - பல
உண்மைகள் புரியுது - ஏழை
நாடி நரம்பெல்லாம் - இன்னும்
வாடி வதங்குது


உணவு,
தேடித் தேடியே தினம் ஆவியடங்குது - அந்தத்
தெருநாய் போலவே இவன் வாழ்வுமிருக்குது
ஒரு கவளச்சோருகூட இவனுயிர காக்குமப்பா,
உன் உள்ளத்தில் இடம் இருந்தா - இவன்
வயிற்று பள்ளம் நிறையுமப்பா

உலகம் உயருது - பல
உண்மைகள் புரியுது - ஏழை
நாடி நரம்பெல்லாம் - இன்னும்
வாடி வதங்குது

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

அம்மா

அம்மா!

நீ,
ஆதிசக்தியின்
திருவுருவே - அண்டங்கள்
அடிபணியும் தேவியே!

என்
ஆறடி உடலை
அலங்கரித்த மதியே!

தேவரும் மூவரும்,
நின்று தொழுகின்ற
தெய்வமே,

பக்குவமாய் என்னைப் பெற்றெடுக்க
பத்தியம் இருந்தவளே,

எதிர்பார்ப்பு இல்லாமல்
என்னை ஈன்றெடுத்தவளே.

ஒச்சமாய்ப் பிறந்தாலும்
எச்சமென்று எண்ணாதவளே..

ஊரே ஏசி வந்து நின்னாலும்,
"எம் புள்ள உத்தமன்னு" உரக்கச்
சொன்னவளே..

பத்து மாதம் கடந்து,
இன்னும் என்னை
நெஞ்சில் சுமப்பவளே.

மரண வலி பொறுத்து
என்னை மனிதனாக்கியவளே,

ஒசோன் படலமாய் இருந்து
நித்தமும் என்னை காப்பவளே,

சிப்பியைப் பெற்றெடுத்த
நன்முத்தே,

நான்
தேடாமல் கிடைத்திட்ட
திரவியமே..

என்
ஆத்ம ஜோதியின்
ஒளி விளக்கே.

உந்தன் வாய்மொழி கேட்காமல்
சலிக்கிறது வாழ்க்கை,
வலிக்கிறது நெஞ்சம்,
ஆதவனைக் காணாத - இந்த
அகிலத்தைப் போல.

வியாழன், 3 டிசம்பர், 2009

சரஸ்வதி

சரஸ்வதி

கலங்கமில்லா கங்கையருவி நீரெடுத்து
காணுடல் மறைத்து
திரண்ட வெண்பனியின் தெளி
முகம் கொண்டு
வீணை யோடுவேத யேடும்
கையில் ஏந்தி
வெண்தா மரை தனிலே
வீற்றிருக்கும் வாணி - நீ
நிலையில்லா இவ்வுலகில் நற்கதியும்
சங்கத் தமிழோடு
சகலமும் தந்த ருள்வாயே!

வியாழன், 26 நவம்பர், 2009

அருவி

அருவி

உன்னை
நினைக்கும் போதெல்லம்
நிலைகுலைந்து போகிறேன்,
நான்.

உன்னைத்
தொட்ட உடனேயே
தொலைந்து போகிறேன்,
நான்.

உன்னைப்
பார்க்கும் போதெல்லாம்
பரவசமாகிறேன் - நான்
உன் வசமாகிறேன்.

உன்னோசை
கேட்கும் போதெல்லாம்
கிறங்கிப் போகிறேன்.

நீ
மலை முடியில் பிறந்தவளா?
இல்லை
மண் மடியில் மலர்ந்தவளா??

மண்ணில் பிறந்து
மலையேறும் சாமியா?
இல்லை,
மலையில் பிறந்து
மண்ணில் ஒடுங்கும் ஆசாமியா?

உன் உதிரத்தில்
ஒரு சொட்டு, என்
உடலிற் பட்டாலே, ஊண்
மறப்பேன், இவ்வுலகை
நான் மறப்பேன்.

மண்ணும் மழையும்
ஊடல் கொள்ளும் நேரம்,
மனம் தேடல் கொள்கிறது...

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

கடற்கரை அனுபவம்

அன்றொரு நாள்,
மாலை நேரம்.

கடலை ரசிக்க,
நாம் இருவரும் காலாற
நடை போடுகிறோம்.

கார் மேகத்தைக் கண்டால்
தோகை விரித்தாடும் மயில் போல்
உன்னைக் கண்ட கடலும்
அலைகளை அள்ளி எறிந்து
கும்மாளம் போடுகிறது.

கடலை ரசித்தபடி
நாமிருக்க, விரைவில்
நகர்ந்து சென்று விட்டது
நான்கு மணிநேரம்.


"போதும், போகலாம்.
சலித்துவிட்டது - கடல்" என்கிறாய்
நீ.

"இல்லை, இரு.
இன்னும் உன்னை
ரசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றது
கடல்.

உன்னிரு இமை மூடி,
என் இடது தோளில்
தலை சாய்க்கிறாய்
நீ.

என் மீது கோபம்
கொண்ட கடல்,
நுரைத்த எச்சிலை
என் முகத்தில்
உமிழ்ந்துவிட்டுச் சென்றது.

கடற்கரை மணலில்
உன் பெயரை வரைகிறேன்
நான்.

ஆர்ப்பரிக்கும் அலையுடன் வந்து - அதை
கவர்ந்து செல்லப் பார்க்கிறது,
கடல்.

கடல் தோற்றதைக் கண்டு
சிரிக்கிறேன்
நான்.

அதைக் கண்ட கடல்,
கருக்கூடி நிற்கிறது
வானில்.

ஒரு வினாடி கூட
விரையம் ஆக்காமல்
மறு நொடியே வந்தது - மழை.

உனது பெயரை
கடலுக்குள் அடித்துச் சென்றதும்
கலைந்தது மேகம்; நின்றது மழை.

முழுக்க
நனைந்து விட்டோம்
நாம்.

திரும்பி பார்க்கிறேன்,
உன்மேல் விழுந்த
மழைத்துளி யாவும்
முத்தாய் மாறி
சிதறி கிடக்கிறது, தரையில்.

சேர்ந்தன சிப்பியினங்கள்,
சூழ்ந்தன நமிருவரை.

"முத்தே முத்துக்களை உருவாக்கினால்
சிப்பிகளுக்கு என்ன வேலை,
என்ன மதிப்பு?" கோபத்தில்
கத்தி யதொரு சிப்பி.

மௌனமாய் நாமிருக்க,
அலைகடலும் அமைதியாயிருக்க,
கலைந்து செல்கிறது
சிப்பிகள் கூட்டம்.

மாலை நேர சூரியனின் முகமும்
சிவந்து விட்டது - செஞ்சிவப்பு நிறத்தில்,
வாடிய உன் முகத்தைக் கண்டு.


இருந்த இடத்தை விட்டு
நகர்கிறோம் நாம்,
சூழ்கிறது இருள்...

அம்மா

இழப்பு
உன்னைவிட்டுச் செல்லும் எதையும்
யாசிப்பதை நிறுத்திவிட்டு
யோசிக்கத் துவங்கு - அது
உனக்குச் சொந்தமில்லை என்னும்
உண்மை புரியும்.

************



அம்மா

அடுத்த ஜென்மத்திலாவது அவள்
காலுக்கு செருப்பாய் பிறக்கவேண்டும்
மிதிபட அல்ல,
அவளைத் தாங்க...

அவள் வேறு யாருமில்லை - அம்மா.

காதல்

என்னுள் நீ, உன்னுள் நான்.
தெளிந்த நீர் நீ.
திட திரவம் நான்.
நீ குளிர்ந்தால் நானாவாய்,
நான் உருகினால் நீயாவேன்.
என்னுள் நீ அடக்கம்,
உன்னுள் நான் அடக்கம்.

************

காதலின் மாயை.

என்ன ஆச்சர்யம்!
இன்னும் உயிருடன் இருக்கிறேன்,
ஒரு கோடி மின்னல் ஒளி கொண்ட
உன் விழி பார்வைபட்டும்.

************

போதையும் பேதையும்
ஒரு ஜாதி - தன்னை
தொட்டவர்களை அடிமையாக்காமல்
விட்டதில்லை இவர்கள்.

************

சலனம்

குளிர்ந்த
உன் தேகத்தை,
தொட்டுவிடவே முன்னேருகிறது
ஒரு கால் - ஆனால்
நெருப்பு வார்த்தைகளால்
சுட்டுவிடுவாய் என்று
வர மறுக்கிறது
மறு கால்.

************

புகைச்சல்

தெரியாமல் நடந்த
நம் தேக உரசலில்
தீபற்றி கொழுந்து விட்டெரிகிறது,
நம் காதல் மட்டுமல்ல,
அதைப் பார்த்தவர்கள்
மனசும் தான்.

************


கண்ணால் பேசு...

ஒலி வடிவில் பேச கற்றுகொடுத்தவள் - அம்மா
வரி வடிவில் பேச கற்றுகொடுத்தது - ஆசிரியார்
ஒளி வடிவில் பேச கற்றுகொடுத்தவள் நீதானே!.

************

கருப்பு நிலா

உன் கண்களை சற்று நேரம்
உற்றுபார்த்து முற்றும் தெளிந்தேன்,
(இரண்டு பால்வெளிகள் - இவ்விரண்டிலும்)
வெள்ளை வானத்தில்
கருப்பு நிலா.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

பூகம்பம்

11th Aug, 09.
இன்று காலை 1:40க்கு வந்த பூகம்பத்தின் தாக்கம்.
-----------------------------------------------------------------------------------

எமனும்
எட்டு உறக்கம்
உறங்கும் நேரம்.

நடுச்சாமம் தாண்டி
இரண்டு மணி நேரம்
ஆகறதுக்குள்ள,

நம்மைத்
தத்தெடுத்து வழத்தவளுக்கு
தாங்காத இடுப்புவலி.

கர்பிணிக்கு
இடுப்பு வலியா இருந்தா
பெறப்போற பிள்ளய
புறந்தள்ள பாத்திருப்பா,

இது நம்மல
தத்தெடுத்து வழத்தவளுக்கு
வந்த வலி,

இவ
புள்ளய புறந்தள்ளப் போறதில்ல
பொறந்த புள்ளைக உயிற
புடுங்கப் போறா.

தத் தெடுத்து
வழத்தவங்கிரதினாலோ என்னவோ
இந்தத் தாயிக்கு,
வைத்தியம் பார்க்க
தரணியில எவனுமில்ல

ஊதக்காத்த ஊதி ஊதி
உஷ்ணப்படுத்தி
உரங்கிட்டு இருந்த உயிரெல்லாம்
வலியில துடிக்கிறவ
ஆடுர ஆட்டம் கண்டு
ஆடிப்போயி ஓடிவந்துட்டாக
வீட்டவிட்டு வெளிய.

விஞ்ஞான மருத்துவம் வந்திருச்சு,
விம்மித் துடிக்கிற இவ
இடுப்பு வலியோட அளவு
தோராய கணக்குப்படி
6.3 ரிக்டேர்ன்னு சொல்லிருச்சு,

வலியில துடிக்கிறவள
பார்த்த வானமும்,
வாரி இரைக்குது தண்ணீர,
கண்ணீரா...

வலியில
வாந்தி எடுக்கப் பாக்குறா
கடல் நீர - சுனாமியா..

நினைச்சுக் கூட பார்க்கல,
அஞ்சு நிமிஷத்துக்குள்ள
அடங்கிப் போச்சு வலி.

வரும்போது "வர்ரேன்னு"
சொல்லாம வந்த வலி
போகும்போது "போரேன்னு"
சொல்லமலேயே போயிருச்சு...

அமைதியாக் கிடந்தவள
ஆராய்ச்சி பண்ணி பார்த்ததுல
வந்தது - இடுப்பு
வலி இல்ல,
வெப்பத்தினால வரக்கூடிய
வெரும் வலி - "சூட்டு வலி"ன்னு
சொல்லிருச்சு மருத்துவம்.

இடுப்பு வலியெடுத்தா
செத்து பொழைக்குற தாய் மாதிரி,
இவளுக்கு வர்ர இந்த
"இடுப்பு வலி"யால நித்தமும்
செத்து செத்து பொழைக்குதுக
உயிரோட இருக்குற ஜனங்க....

சனி, 8 ஆகஸ்ட், 2009

வாடகைத் தாய் - வருகை 1

வாடகைத் தாய்.
ஒரு உண்மையை உரைக்க, சில கற்பனைகளைச் சேர்த்து பதிவிடுகிறேன். இன்னும் ஒரு சில பதிவுகளில் இவள் நிறைவு பெறுவாள்.
---------------------------------------------------------------------------


அதிகாலை ஆறுமணி,
ஆதவன் அலைகடல் தாண்டி - தனது
ஊர்வலத்தைத் துவங்கும் நேரம்.

அக்கால கிழவிபோல்,
கனுக்கால் வரை
சேலையை சேர்த்துக்கட்டி,
துரிதமாய் வேலையில் ஈடுபட்டிருந்தாள் - கமலம்.

இருபது நாட்களுக்குப் பிறகு
இன்றே அவள் முகத்தில்
இன்பம் இருக்கை போட்டு
அமர்ந்து இருக்கிறது..

பொங்கி வழிந்த நீரில்
பொசுங்கி, இறந்து போன
நெருப்பிற்கு, இன்னுயிர் கொடுக்க,
தனதுயிர்க் காற்றை
குழல் வழியே கொடுத்தாள்..

உயிர் காத்தது
உத்தமனேயானலும்; அவன் உதிரம்
பருகத்துடிக்கும் நாகம் போல்,
உயிர் பெற்றதும்
சிட்டாய்ப் பறந்து - அவள்
சிறுமுகத்தில் விழுந்தது
தீச் சிறாகாய் ஒன்று.

நெருப்பின் தீவிரம்
நெடியாய் இருக்கத்,
துடியாத் துடித்தாள்,
பக்கத்தில் இருந்த பாத்திரத்தில்
கைவிட்டுதுலாவி - தரை
தட்டும் வரை தடவி - பின்,
தண்ணீர் இல்லை என்றுண்ர்ந்தாள்.

இறுதியாய்,
வெத்து பாத்திரத்தில்
விரல் விட்டுத் தேடி
எஞ்சி இருந்த இருசொட்டு நீரை
சேர்த்து எடுத்து
சிவந்த இடத்தில் செலுத்தினாள்.

தீயின் தீவிரத்தை குறைக்க,
மஞ்சள் கிழங்கெடுத்து, அதை
மழு மழுவென்று அறைத்து,
ஆமணக்கு எண்ணையை
கொழ கொழன்னு அதடனுடன்
சேர்த்து குழப்பி, சேதாரமான இடத்தில்
தேய்க்கத் தொடங்கும் போது....

அரவத்தைக் கண்டவன்
அலறல் சத்தமாய்,
நிசப்தமாய் இருந்த வீட்டை
நிலை குலைத்தது - அந்த
குரல்....


- மீண்டும் வருவள் இவள்

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

சொத்து.....

பிறக்கின்ற மலர்கூட
மடிந்த பின்
உரமாகவே நினைக்கிறது
தன்னை உருவாகி, உருவம்தந்த செடிக்கு.

ஆனால்,
மனிதன் மட்டுமே
தான் வாழத், தன்
பெற்றவளின் உரம் கேட்கிறான்
பரம்பரைச் சொத்தைப் பங்கிட....

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

முதல் முயற்சி....... பயிற்சிக்காக

நித்தம் நினைப்பதுண்டு,

இன்றேனும்
ஒரு பக்க கவிதை
உதிர்க்க வேண்டும் என்று ...

தட்டுத் தடுமாறி
தலைப்பை தேர்வு செய்வேன்.

பின்,
தலைப்பிற்கு தக்கவாறு
நான்கைந்து வார்த்தைகளை வார்த்து
வாக்கியத்தை வரவழைப்பேன்.

எதுகை - மோனை,
உவமை - உருவகம்,
இலக்கண - இலக்கியம்,
இவைகளுக்கு முரணாய்

வந்த வார்த்தைகளுக்கு
வரிவடிவம் கொடுக்க,

எழுதத்
தொடங்கி விடுவேன்,
தொடங்கிய வேகத்தில்
துவண்டும் விடுவேன்...

பாதி எழுதிய பின்,
மீதியை விழுங்கிவிடுகிறேன்,

கவிதையின் நயம் கலங்கி விடுமென்று.
.
.
.
.
.
.
.

இக்கவிதை இங்கே முடிய
மற்றொன்றை எழுத மனம் விழைகிறது..... :)

வியாழன், 23 ஜூலை, 2009

திரும்பா நிகழ்வு.....

கலைந்த கருவும்
கடந்த காலமும்

நிகழ்ந்த நிகழ்வும்
நிலைகுலைந்த மனமும்

கரை கடந்த அலையும்
காற்றில் அணைந்த அகல் விளக்கும்

திணறி நின்றாலும்
திமிராயிச் சொன்னாலும்

இழந்த இவைகள்
இனி வரா.