நித்தம் நினைப்பதுண்டு,
இன்றேனும்
ஒரு பக்க கவிதை
உதிர்க்க வேண்டும் என்று ...
தட்டுத் தடுமாறி
தலைப்பை தேர்வு செய்வேன்.
பின்,
தலைப்பிற்கு தக்கவாறு
நான்கைந்து வார்த்தைகளை வார்த்து
வாக்கியத்தை வரவழைப்பேன்.
எதுகை - மோனை,
உவமை - உருவகம்,
இலக்கண - இலக்கியம்,
இவைகளுக்கு முரணாய்
வந்த வார்த்தைகளுக்கு
வரிவடிவம் கொடுக்க,
எழுதத்
தொடங்கி விடுவேன்,
தொடங்கிய வேகத்தில்
துவண்டும் விடுவேன்...
பாதி எழுதிய பின்,
மீதியை விழுங்கிவிடுகிறேன்,
கவிதையின் நயம் கலங்கி விடுமென்று.
.
.
.
.
.
.
.
இக்கவிதை இங்கே முடிய
மற்றொன்றை எழுத மனம் விழைகிறது..... :)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக