சரஸ்வதி
கலங்கமில்லா கங்கையருவி நீரெடுத்து
காணுடல் மறைத்து
திரண்ட வெண்பனியின் தெளி
முகம் கொண்டு
வீணை யோடுவேத யேடும்
கையில் ஏந்தி
வெண்தா மரை தனிலே
வீற்றிருக்கும் வாணி - நீ
நிலையில்லா இவ்வுலகில் நற்கதியும்
சங்கத் தமிழோடு
சகலமும் தந்த ருள்வாயே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக