என்னுள் நீ, உன்னுள் நான்.
தெளிந்த நீர் நீ.
திட திரவம் நான்.
நீ குளிர்ந்தால் நானாவாய்,
நான் உருகினால் நீயாவேன்.
என்னுள் நீ அடக்கம்,
உன்னுள் நான் அடக்கம்.
************
காதலின் மாயை.
என்ன ஆச்சர்யம்!
இன்னும் உயிருடன் இருக்கிறேன்,
ஒரு கோடி மின்னல் ஒளி கொண்ட
உன் விழி பார்வைபட்டும்.
************
போதையும் பேதையும்
ஒரு ஜாதி - தன்னை
தொட்டவர்களை அடிமையாக்காமல்
விட்டதில்லை இவர்கள்.
************
சலனம்
குளிர்ந்த
உன் தேகத்தை,
தொட்டுவிடவே முன்னேருகிறது
ஒரு கால் - ஆனால்
நெருப்பு வார்த்தைகளால்
சுட்டுவிடுவாய் என்று
வர மறுக்கிறது
மறு கால்.
************
புகைச்சல்
தெரியாமல் நடந்த
நம் தேக உரசலில்
தீபற்றி கொழுந்து விட்டெரிகிறது,
நம் காதல் மட்டுமல்ல,
அதைப் பார்த்தவர்கள்
மனசும் தான்.
************
கண்ணால் பேசு...
ஒலி வடிவில் பேச கற்றுகொடுத்தவள் - அம்மா
வரி வடிவில் பேச கற்றுகொடுத்தது - ஆசிரியார்
ஒளி வடிவில் பேச கற்றுகொடுத்தவள் நீதானே!.
************
கருப்பு நிலா
உன் கண்களை சற்று நேரம்
உற்றுபார்த்து முற்றும் தெளிந்தேன்,
(இரண்டு பால்வெளிகள் - இவ்விரண்டிலும்)
வெள்ளை வானத்தில்
கருப்பு நிலா.
திங்கள், 24 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக