செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

பூகம்பம்

11th Aug, 09.
இன்று காலை 1:40க்கு வந்த பூகம்பத்தின் தாக்கம்.
-----------------------------------------------------------------------------------

எமனும்
எட்டு உறக்கம்
உறங்கும் நேரம்.

நடுச்சாமம் தாண்டி
இரண்டு மணி நேரம்
ஆகறதுக்குள்ள,

நம்மைத்
தத்தெடுத்து வழத்தவளுக்கு
தாங்காத இடுப்புவலி.

கர்பிணிக்கு
இடுப்பு வலியா இருந்தா
பெறப்போற பிள்ளய
புறந்தள்ள பாத்திருப்பா,

இது நம்மல
தத்தெடுத்து வழத்தவளுக்கு
வந்த வலி,

இவ
புள்ளய புறந்தள்ளப் போறதில்ல
பொறந்த புள்ளைக உயிற
புடுங்கப் போறா.

தத் தெடுத்து
வழத்தவங்கிரதினாலோ என்னவோ
இந்தத் தாயிக்கு,
வைத்தியம் பார்க்க
தரணியில எவனுமில்ல

ஊதக்காத்த ஊதி ஊதி
உஷ்ணப்படுத்தி
உரங்கிட்டு இருந்த உயிரெல்லாம்
வலியில துடிக்கிறவ
ஆடுர ஆட்டம் கண்டு
ஆடிப்போயி ஓடிவந்துட்டாக
வீட்டவிட்டு வெளிய.

விஞ்ஞான மருத்துவம் வந்திருச்சு,
விம்மித் துடிக்கிற இவ
இடுப்பு வலியோட அளவு
தோராய கணக்குப்படி
6.3 ரிக்டேர்ன்னு சொல்லிருச்சு,

வலியில துடிக்கிறவள
பார்த்த வானமும்,
வாரி இரைக்குது தண்ணீர,
கண்ணீரா...

வலியில
வாந்தி எடுக்கப் பாக்குறா
கடல் நீர - சுனாமியா..

நினைச்சுக் கூட பார்க்கல,
அஞ்சு நிமிஷத்துக்குள்ள
அடங்கிப் போச்சு வலி.

வரும்போது "வர்ரேன்னு"
சொல்லாம வந்த வலி
போகும்போது "போரேன்னு"
சொல்லமலேயே போயிருச்சு...

அமைதியாக் கிடந்தவள
ஆராய்ச்சி பண்ணி பார்த்ததுல
வந்தது - இடுப்பு
வலி இல்ல,
வெப்பத்தினால வரக்கூடிய
வெரும் வலி - "சூட்டு வலி"ன்னு
சொல்லிருச்சு மருத்துவம்.

இடுப்பு வலியெடுத்தா
செத்து பொழைக்குற தாய் மாதிரி,
இவளுக்கு வர்ர இந்த
"இடுப்பு வலி"யால நித்தமும்
செத்து செத்து பொழைக்குதுக
உயிரோட இருக்குற ஜனங்க....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக