வியாழன், 26 நவம்பர், 2009

அருவி

அருவி

உன்னை
நினைக்கும் போதெல்லம்
நிலைகுலைந்து போகிறேன்,
நான்.

உன்னைத்
தொட்ட உடனேயே
தொலைந்து போகிறேன்,
நான்.

உன்னைப்
பார்க்கும் போதெல்லாம்
பரவசமாகிறேன் - நான்
உன் வசமாகிறேன்.

உன்னோசை
கேட்கும் போதெல்லாம்
கிறங்கிப் போகிறேன்.

நீ
மலை முடியில் பிறந்தவளா?
இல்லை
மண் மடியில் மலர்ந்தவளா??

மண்ணில் பிறந்து
மலையேறும் சாமியா?
இல்லை,
மலையில் பிறந்து
மண்ணில் ஒடுங்கும் ஆசாமியா?

உன் உதிரத்தில்
ஒரு சொட்டு, என்
உடலிற் பட்டாலே, ஊண்
மறப்பேன், இவ்வுலகை
நான் மறப்பேன்.

மண்ணும் மழையும்
ஊடல் கொள்ளும் நேரம்,
மனம் தேடல் கொள்கிறது...