
பணம் (பணமற்ற மனிதன்)
வாடிய பூவை வண்டுகள் தேடலாம்
வற்றிய குளமதை வாத்துகள் தேடலாம்
பெய்யாத மேகங்கண்டு பொன்மயில் ஆடலாம் - பணம்
இல்லாத உனையிந்தப் பாரிலுள்ளோர் தேடுவரோ?
கவலை (சுற்றமிழந்த மனிதன்)
மண்ணுலகம் செழிக்க விண்ணுலகம் அழுகிறது
பிள்ளை நலம்வாழ பெற்றவள் அழுகிறாள்
கணவன் உயிர்காக்க தாலிகட்டியவள் அழுகிறாள் - மனிதா
எவ்வுயிர் காக்கநாளும் நீயிங்கு அழுகிறாய்?.
இந்த படத்திற்கேற்றார் போல் எழுத முயன்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக