வாடகைத் தாய்.
ஒரு உண்மையை உரைக்க, சில கற்பனைகளைச் சேர்த்து பதிவிடுகிறேன். இன்னும் ஒரு சில பதிவுகளில் இவள் நிறைவு பெறுவாள்.
---------------------------------------------------------------------------
அதிகாலை ஆறுமணி,
ஆதவன் அலைகடல் தாண்டி - தனது
ஊர்வலத்தைத் துவங்கும் நேரம்.
அக்கால கிழவிபோல்,
கனுக்கால் வரை
சேலையை சேர்த்துக்கட்டி,
துரிதமாய் வேலையில் ஈடுபட்டிருந்தாள் - கமலம்.
இருபது நாட்களுக்குப் பிறகு
இன்றே அவள் முகத்தில்
இன்பம் இருக்கை போட்டு
அமர்ந்து இருக்கிறது..
பொங்கி வழிந்த நீரில்
பொசுங்கி, இறந்து போன
நெருப்பிற்கு, இன்னுயிர் கொடுக்க,
தனதுயிர்க் காற்றை
குழல் வழியே கொடுத்தாள்..
உயிர் காத்தது
உத்தமனேயானலும்; அவன் உதிரம்
பருகத்துடிக்கும் நாகம் போல்,
உயிர் பெற்றதும்
சிட்டாய்ப் பறந்து - அவள்
சிறுமுகத்தில் விழுந்தது
தீச் சிறாகாய் ஒன்று.
நெருப்பின் தீவிரம்
நெடியாய் இருக்கத்,
துடியாத் துடித்தாள்,
பக்கத்தில் இருந்த பாத்திரத்தில்
கைவிட்டுதுலாவி - தரை
தட்டும் வரை தடவி - பின்,
தண்ணீர் இல்லை என்றுண்ர்ந்தாள்.
இறுதியாய்,
வெத்து பாத்திரத்தில்
விரல் விட்டுத் தேடி
எஞ்சி இருந்த இருசொட்டு நீரை
சேர்த்து எடுத்து
சிவந்த இடத்தில் செலுத்தினாள்.
தீயின் தீவிரத்தை குறைக்க,
மஞ்சள் கிழங்கெடுத்து, அதை
மழு மழுவென்று அறைத்து,
ஆமணக்கு எண்ணையை
கொழ கொழன்னு அதடனுடன்
சேர்த்து குழப்பி, சேதாரமான இடத்தில்
தேய்க்கத் தொடங்கும் போது....
அரவத்தைக் கண்டவன்
அலறல் சத்தமாய்,
நிசப்தமாய் இருந்த வீட்டை
நிலை குலைத்தது - அந்த
குரல்....
- மீண்டும் வருவள் இவள்